search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா பிறந்தநாள்"

    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது.
    • திருமணங்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம், கோகுல இந்திரா உள்பட பேரவை மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமாக கொண்டாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    முதல்கட்டமாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதி மதுரை குன்றத்தூரில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த திருமணங்களை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இந்த ஜோடிகளில் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி-முரளி ஜோடியும் ஒன்று. கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி மலர அயராது உழைத்திட உறுதி ஏற்போம். எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர்கின்ற வரையில் களத்தில் மக்களுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். புதிய வெற்றி வரலாற்றை உணர்த்திட ஒற்றுமையோடு தொடர்ந்து உழைப்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 51 ஏழை எளிய மணமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
    • இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-

    வெள்ள தடுப்பு மற்றும் வெள்ளமீட்பு நடவடிக்கை களை தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தற்போது தண்ணீரில் தமிழகம் தத்தளிக்கிறது. இதனால் மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும் பருவ மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தொகையை தி.மு.க. அரசு உடனடியாக வழங்க வேண்டும்.7 பேர் விடுதலைக்கு 2014-ம் ஆண்டு முதல் முதலாக விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை நிறைவேற்றினார். 7 பேர் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த இருவர் மட்டும் தான்.

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23-ந் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கி றார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×